செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகள் இயங்குகின்றன. இதில் உறுப்பினர்களாக இருக்கும் கிறிஸ்தவ மக்களை, அவர்கள் இறந்தபின், செங்கல்பட்டு அருகே உள்ள பெத்தேல் நகரில் பல ஆண்டுகளாக அடக்கம் செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன், ஜேசிகே நகரை சேர்ந்த கிறித்தவ பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்ய சென்றபோது, அப்பகுதித மக்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலையானது. இதையடுத்து செங்கல்பட்டு தாலுகா போலீசார், இரு தரப்பினரிடம் சமரசம் பேசி, உடலை அடக்கம் செய்தனர்.