ஹிட்லராக பிரதமர் மோடி ஆட்சி செய்கிறார்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் தாக்கு

சென்னை: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட  37வது வார்டில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டில்லிபாபுவை ஆதரித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வியாசர்பாடி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மேற்குவங்கத்தில் சட்டமன்றத்தை ஆளுநர் முடக்கி வைத்ததன் மூலம்  மோடி தன்னை ஹிட்லராக பாவித்து ஹிட்லரைப் போல செயல்படலாம் என நினைக்கிறார்.

ஆனால் ஹிட்லர் போல மாறுவது சிரமம்.  இது ஒரு ஜனநாயக நாடு. மேற்குவங்கத்தில் நடைபெற்றிருப்பதை இந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எப்போதுமே ஜனநாயகத்திற்கு புறம்பான நிகழ்வுகள் எல்லாம் தோற்கடிக்கப்பட்டுளளன. ஒரு சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்று சொன்னால் உச்ச நீதிமன்றத்தின் அனுமதி வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பாகம் மெஜாரிட்டி வேண்டும். ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்படாத வரை அது கருத்து சொல்வதை நாம் தடுக்க முடியாது.  நாம் அந்த கருத்திற்கு எதிரான பரப்புரையை இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: