பழநியில் விசிக போட்டி வேட்பாளர்கள் சஸ்பெண்ட்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி நகராட்சி மற்றும் ஆயக்குடி உள்ளிட்ட பேரூராட்சிகளில் உள்ள சில வார்டுகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த வார்டுகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களுக்கு போட்டியாக, அந்த கட்சியைச் சேர்ந்த சிலரே போட்டியிட்டுள்ளனர். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி போட்டி வேட்பாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பழநி நகர பொருளாளர் துக்கையண்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், முற்போக்கு மாணவர் சங்க மாவட்ட அமைப்பாளர் செல்லதுரை, ஆயக்குடி பேரூர் துணை செயலாளர் பாவலன், நெய்க்காரப்பட்டி பேரூர் செயலாளர் பிரகாஷ், உறுப்பினர் மூர்த்தி ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக விசிக மாவட்ட செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

Related Stories: