இன்று முதல் டி20...ஆஸி-இலங்கை தொடர் ஆரம்பம்

சிட்னி: ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று சிட்னியில் தொடங்குகிறது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி  5ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.  முதல் 2 ஆட்டங்கள் பிப்.11, 13 தேதிகளில் சிட்னியிலும், 3வது ஆட்டம் பிப்.15ம் தேதி கான்பெராவிலும்,  கடைசி 2 ஆட்டங்கள்  பிப்.18, 20 தேதிகளில்  மெல்போர்னிலும் நடக்கின்றன.  இந்த ஆட்டங்கள் பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற உள்ளது.ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸி அணியில்  ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், வேடு, ஹசல்வுட், ஸ்டார்க், ஸம்பா என அனுபவ வீரர்கள் அணி வகுக்க இருக்கிறார்கள். கூடவே சொந்த மண்ணில் விளையாடுவது ஆஸிக்கு கூடுதல் பலம்.

தசுன் ஷனாக தலைமையிலான இலங்கை அணியிலும்  முன்னாள் கேப்டன் கருண ரத்னே, குஷால்,  நிஷாங்கா, ஹசரங்கா, அவிஷிகா என ஆஸியை சமமாளிக்கும் வீரர்கள் உள்ளனர். ஆனால்  அக்டோபரில் முடிந்த டி20 உலக கோப்பைக்கு பிறகு நடப்பு சாம்பியன் ஆஸியும், இலங்கையும் டி20 ஆட்டத்தில் விளையாடவில்லை.  அதே நேரத்தில்  உள்ளூர் டி20 தொடரில் விளையாடிய பலர் இரு அணிகளிலும் இருக்கின்றனர். இந்த இரு அணிகளும் இதுவரை மோதிய 17 டி20 ஆட்டங்களில்  ஆஸி 9,  இலங்கை 8 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. அதிலும் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களிலும் ஆஸிதான் வென்றுள்ளது. இந்த 5 ஆட்டங்களில் 4 ஆஸியிலும், 1 அமீரகத்திலும் நடந்துள்ளன.

Related Stories: