அமராவதி: ஆந்திராவில் புஷ்பா பட பாணியில் பெட்ரோல் டேங்கரில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 2 டன் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜயநகரம் பகுதியில் அமைந்துள்ள அரக்கு மலைப்பகுதியில் இருந்து ஹைதராபாத் நகருக்கு லாரி மூலமாக கஞ்சா கடத்த உள்ளதாக சிறப்பு அதிரடி படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து விஜயநகரம் - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சோதனைச்சாவடி அமைத்துஅதிரடி படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.