லண்டன்: இங்கிலாந்து ராணி 2வது எலிசபெத் (95). அவர் அரியணை ஏற்று 70 ஆண்டுகள் ஆகின்றன. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில், ‘எனக்கு நீங்கள் அனைவரும் வழங்கிய ஆதரவுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தொடர்ந்து அளித்து வரும் விசுவாசம், பாசத்திற்கு நான் எப்போதும் நன்றி உள்ளவராகவும், தாழ்மையுடனும் இருக்கிறேன். எனது காலம் முழுமை அடையும்போது எனது மகன் சார்லஸ் அரசராவார்.