மூணாறு : மூணாறு அருகே, மறையூரில் சந்தனமரத்தை வெட்டி கடத்துவது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறிலிருந்து 40 கி.மீ தொலைவில் மறையூர் உள்ளது. இப்பகுதியில் சந்தன மரங்கள் இயற்கையாக வளர்கின்றன. இந்நிலையில், இந்த பஞ்சாயத்தில் உள்ள ஆற்றுப்புறம்போக்கிலும், தனியார் இடங்களிலும் வளர்ந்துள்ள சந்தனமரங்களை சில தினங்களுக்கு முன் மர்மநபர்கள் வெட்டி கடத்துவதாக புகார் எழுந்துள்ளது.