புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள எரவாடா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடந்து வருகிறது. இரவு நேரத்திலும் இங்கு பணிகள் நடந்து வருகிறது. நேற்றிரவு வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக ஸ்லாப் இடிந்து விழுந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் 5 தொழிலாளர்கள் இறந்த கிடந்தது தெரிந்தது. 5 பேர் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.