காரில் கடத்திச் சென்ற 1,000 ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்: மும்பை போலீஸ் அதிரடி

தானே: மகாராஷ்டிர மாநிலம் தானே அடுத்த பிவாண்டியில் 1,000 ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்களுடன் சிக்கிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘மும்பையின் நாடி நாகா அருகே காரில் கடத்திச் செல்லபட்ட 1,000 ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்விவகாரத்தில் அல்பேஷ் என்ற பல்யா ஹிராஜி பாட்டீல் (34), பங்கஜ் அச்செலால் சவுஹான் (23), சம்யா ராம்சந்திரா வேத்கா (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் பால்கர் மாவட்டம் விக்ரம்காட் பகுதியை சேர்ந்தவர்கள்.

இவர்கள் வெடிமருந்துகளைத் திருடி விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கடந்த மே மாதம் பிவாண்டி அடுத்த கரிவாலி பகுதியில் 12,000 ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்டன. அதனால், வெடிபொருள் கடத்தல் கும்பல் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: