ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய நடந்த துப்பாக்கி சூட்டில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா, பத்காம் மாவட்டங்களில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, வீரர்கள் அங்கு விரைந்தனர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். தீவிரவாதிகளை சரணடையும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அதனை ஏற்க மறுத்து திடீரென தாக்குதலை தொடங்கினர்.