சண்டிகர் : பஞ்சாபில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் நட்சத்திர வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 31ம் தேதி வரை அங்கு பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் வேட்பாளர்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றி வீடு வீடாகச் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வேட்பு மனு தாக்கலும் விறுவிறுப்படைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் நட்சத்திர வேட்பாளருமான சித்து, அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் களம் இறங்குகிறார்.