ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே சேத்தூர் நட்சாடைப்பேரி ஒத்தைப்பனை காட்டுப்பகுதியில் வலம் வரும் ஒற்றை காட்டுயானை விவசாய நிலத்தில் புகுந்து மா, தென்னை, தேக்கு மரங்களை சேதபடுத்தியது. இதனால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.ராஜபாளையம் அருகே சேத்தூர் நட்சாடைப்பேரி ஒத்தைப்பனை காட்டுப்பகுதியில் லட்சுமணசாமி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து வழி தவறி வந்த ஒற்றை காட்டுயானை இரவு நேரத்தில் லட்சுமணசாமியின் தென்னந்தோப்பிற்குள் புகுந்து இருபதிற்கும் மேற்பட்ட தென்னை, மா, தேக்கு மரங்களை ஒடித்து சேதப்படுத்தியது. மேலும் பத்து வருடங்களுக்கு மேலாக வளர்க்கப்பட்ட தென்னை மரங்களை வேரோடு யானை பிடுங்கி வீசியதால் பெரும் இழப்பை சந்தித்தாக லட்சுமணசாமி கூறினார்.