டெல்லி: பெண்கள் அதிகளவில் சேர்ந்து என்.சி.சி.யை வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் என்.சி.சி. மாணவர்களின் சாகசத்தை கண்டுகளித்த பிரதமர் நரேந்திர மோடி பேசினார். டெல்லி, குடியரசு தின என்.சி.சி. முகாம் நிறைவையொட்டி தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு நடைபெற்றது. என்.சி.சி படையினரின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றார்.