நுகுஅலோபா: ‘டோங்கா தீவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்ததால் வெளிப்பட்ட ஆற்றலானது ஹிரோஷிமா குண்டுவெடிப்பை காட்டிலும் 100 மடங்கு சக்திவாய்ந்தது’ என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டோங்கா தீவுக்கு அருகே கடற்பகுதியில் ஹங்கா டோங்கா -ஹங்கா ஹபாய் எரிமலை கடந்த 15ம் தேதி வெடித்து சிதறியது. இதன் காரணமாக சுமார் 40 கி.மீ. உயரத்துக்கு எரிமலை குழம்புகள் தூக்கி வீசப்பட்டன. டோங்கா எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமியினால் அருகில் இருந்த தீவுகள் கடுமையாக சேதடைந்துள்ளன. இந்த எரிமலை வெடிப்பினால் நச்சு சாம்பல் உமிழப்பட்டது. குடிநீர் விஷதன்மை நிறைந்ததாக மாறியது. மேலும் பயிர்கள் முற்றிலும் நாசமடைந்தன. மொத்தத்தில் எரிமலை வெடித்து சிதறியதால் 2 கிராமங்கள் அழிந்து தரைமட்டமானது. மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.