திருச்சி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் யானை தந்தத்தில் புலி பல் செய்து விற்பனை செய்த 2 பேரை வனத்துறையினர் அண்மையில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்சி துவாக்குடி அருகே தேவராயநேரி நரிக்குறவர் காலனி பகுதியில் 2 பேர் யானை தந்தத்தில் புலி பல் செய்து விற்பது தெரிய வந்தது. இதையடுத்து வன சரகர்கள் தேவராயநேரி பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த சோதனையில் நரிக்குறவர் காலனியை சேர்ந்த சவுந்தரராஜன்(52), அவரது மகன் அருண்பாண்டி(28) ஆகியோரிடம் சிறிய அளவிலான யானை தந்தம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யானை தந்தத்தை துண்டுகளாக்கி செயின், மோதிரங்களில் பதித்து அதிக விலைக்கு விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.