வேலூர் : வேலூர் மாநகராட்சி சார்பில் சிஎம்சி மருத்துவமனை வளாகம், பழைய, புதிய பஸ் நிலையங்கள், தங்கும் விடுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன்படி, வேலூரில் முழு ஊரடங்கு காரணமாக பழைய, புதிய பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் பழைய, புதிய பஸ் நிலையங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு முழுமையாக கிருமி நாசினி தெளித்தனர்.