கும்மிடிப்பூண்டி: துக்க வீட்டில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் தம்பியை கோடாரியால் சரமாரியாக வெட்டி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்டணமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(46). இவரது தம்பி சுரேஷ்(37). இருவரும் கட்டிட தொழிலாளிகள். தாய் தனலட்சுமியுடன் வசித்து வந்தனர். சுப்பிரமணிக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். சுரேஷூக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்.இந்நிலையில், கெட்டணமல்லி கிராமத்தில் நேற்று முன்தினம் ஒருவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் சுப்பிரமணி, சுரேஷூடன் சென்றார். பின்னர் இரவு வீட்டில் ஒன்றாக அமர்ந்து இருவரும் மது அருந்தினர். அப்போது, குடிபோதையில் இருவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கிக்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி வீட்டில் மரம் வெட்ட பயன்படுத்தும் கோடாரியால் சுரேஷை சரமாரியாக வெட்டினார்.