மும்பை: மும்பையில் திருமண தகவல் மைய இணைய தளங்களில் விளம்பரம் செய்த பெண்களிடம் பழகி லட்சக்கணக்கில் பணம் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காஞ்சுர்மார்க்கை சேர்ந்த 28 வயது பெண் வரன் தேடி திருமண தகவல் மைய இணையதளத்தில் பதிவு செய்துள்ளார். அதை பார்த்து இளைஞர் ஒருவர் போன் செய்துள்ளார். பின்னர் இருவரும் போனில் பேசி பழகி வந்துள்ளனர். அந்த பெண்ணின் நம்பிக்கையை பெற்ற அவர் பெற்றோரின் அவசர மருத்துவ சேவைக்காக 2.5 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக கேட்டுள்ளார். அவரின் பேச்சை நம்பிய அந்த பெண்ணும் பணத்தை இளைஞரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.