வருசநாடு: மயிலாடும்பாறை அருகே வல்வால்கள் தொல்லையால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தேனி மாவட்டம் மயிலாடும்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை மற்றும் இலவம் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வவ்வால்கள் கூட்டம் மயிலாடும்பாறை பகுதிக்கு படையெடுத்தது. பகல் நேரங்களில் ஓட்டணை அருகே மூலவைகை ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள மருத மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் வவ்வால்கள் இரவு நேரங்களில் இலவம், தென்னை மரங்களில் உள்ள பூ, பிஞ்சுகளை சேதப்படுத்தி வருகின்றன.