ஜகார்தா : இந்தோனேஷியாவின் தலைநகரை ஜகார்த்தாவில் இருந்து போர்னியோ தீவுக்கு மாற்றும் மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. புதிய தலைநகருக்கு நுசான்தாரா என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா மிக வேகமாக கடலில் மூழ்கி வருகிறது. இதனால் போர்னியோ தீவிற்கு தலைநகரை மாற்ற கடந்த 2019ம் ஆண்டு அதிபர் விடோடோ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். பெருந்தொற்றால் இதற்கான நடைமுறை தொடர்வதில் தாமதம் நிலவி வந்தது.