அண்ணாநகர்: அரும்பாக்கம் பகுதியில் ரோட்டில் நடந்துச்சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 21 வயது மாணவி, அங்குள்ள கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் 3ம் ஆண்டு படித்து வருகின்றார். அத்துடன் நெற்குன்றத்தில் உள்ள ஒரு மாணவனுக்கு மியூசிக் கிளாஸ் கற்றுக்கொடுத்து வருகிறார். நேற்று மாணவனுக்கு மியூசிக் கிளாஸ் சொல்லி கொடுத்துவிட்டு அங்கிருந்து இரவு அரும்பாக்கம் பகுதியில் உள்ள மருத்துவமனை அருகே நடந்துவந்துள்ளார்.