ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே 119வது பிறந்த நாளை கேக் வெட்டி மூதாட்டி கொண்டாடினார். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள பாப்பனக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி அம்மாள் (119). இவரது கணவர் கருப்பையா. இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். 20 வருடங்களுக்கு முன் கருப்பையா இறந்து விட்டார். லெட்சுமி அம்மாளுக்கு 119வது பிறந்தநாள் விழா நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.