சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் முதலமைச்சர் ஆய்வினை மேற்கொண்டார். ரூ.24,65 கோடி செலவில் கட்டப்பட்ட செம்மொழி தமிழாய்வு நிறுவன கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் உள்ள ஓலைச்சுவடி, அறிய நூல்கள், அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.