மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே சின்ன கொளம்பாக்கத்தில் உள்ள கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கும், பன்னாட்டு தனியார் நிறுவனத்துக்கும் இடையே கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கல்லூரி சார்பில் கல்லூரி இயக்குனர் முனைவர் மீனாட்சி அண்ணாமலை, தனியார் நிறுவன மனிதவள மேம்பாட்டு துறை தலைவர் ஒப்பில்லான் மற்றும் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அலுவலர் ஜேம்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.