லடாக்: இந்தியா- சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 14 ஆம் சுற்று பேச்சுவார்த்தை நாளை லடாக் எல்லையில் சீன பகுதியான சூசுல்- மோல்டா அருகே நடைபெறுகிறது. இந்தியா- சீன ராணுவங்களுக்கு இடையே கிழக்கு லடாக் எல்லையில் 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க இரண்டு நாட்டு ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் தொடர்ந்து பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கி கொள்வதில் இந்தியா- சீனா இடையே இழுப்பறி நீடித்து வருகிறது.