ஊட்டி : கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு பஸ்களில் ஆர்டிஒ., ஆய்வு செய்தார். கொரோனா மற்றும் ஒமிக்கரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊட்டியில் இருந்து கிராமப்புறங்கள் மற்றும் சமவெளி பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்களா என்று ஊட்டி ஏடிசி., பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் ஆய்வு செய்தார்.