டெல்லி: ஒமிக்ரான் வைரஸுக்கான தடுப்பூசி மார்ச் மாதத்திற்குள் தயாராகிவிடும் என ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனா ஒமிக்ரான் வைரஸ் பெறும் அச்சுறுத்தலாக உருவெடுத்து இருக்கிறது. டெல்டா வகை வைரசை விட வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரஸ் உள்ளன. தற்போது கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுமா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது. இந்நிலையில், ஒமிக்ரான் தடுப்பூசி மார்ச்சில் தயாராகும் என ஃபைசர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.