திருவேற்காட்டில் பரபரப்பு வடமாநில வாலிபர் அடித்து கொலை

பூந்தமல்லி: வடமாநில வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அடுத்த திருவேற்காடு பெருமாள் அகரம், பெரியார் நகரில் முட்புதர்கள் நிறைந்த பகுதியில் வாலிபர் ஒருவர் தலையில் காயங்களுடன் சடலமாக கிடப்பதாக திருவேற்காடு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த சுதிர்குமார் (30). அயனம்பாக்கம், செல்லியம்மன் நகரில் நண்பர்களுடன் வாடகைக்கு அறை எடுத்து தங்கி, அம்பத்தூரில் உள்ள வெல்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த சனிக்கிழமை வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர், பின்னர் திரும்பி வரவில்லை. இந்தவேளையில் சுதிர்குமார், தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது.தொடர்ந்து போலீசார், சுதிர்குமார் ஏன் கொலை செய்யப்பட்டார்,  மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories: