சென்னை ஆன்லைன் வகுப்பின் போது ஆபாசமாக படம் பிடித்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு!: ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக் தகவல்..!! Jun 04, 2021 ராஜகோபாலன் சென்னை பத்ம சேஷாத்ரி சென்னை: ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போலீசார் விசாரணையில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே. நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் பாடம் எடுத்து வந்த அவர், ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணமாக தோன்றி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரித்த போது, பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அவரது செல்பேசியில் அழைக்கப்பட்டு வாட்ஸ் அப் உரையாடல் மற்றும் படங்களை மீட்டெடுப்பது அதன் அடிப்படையிலும், மாணவிகளின் புகார் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளை ஜூம் செய்து ஆபாசமாக படம் பிடித்து ரசித்ததாகவும், படங்களை ஆபாசமாக எடிட் செய்து மாணவிகளுக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது. போலீஸ் காவல் இன்று மாலை 3 மணியோடு முடிவடைய உள்ள நிலையில், இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இன்னும் சில ஆசிரியர்கள் விரையில் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவிகள் பலமுறை புகார் அளித்தும் அலட்சியப்படுத்தியது தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் முன்பு ராஜகோபாலன், பத்ம சேஷாத்ரி பள்ளியின் முதல்வர், தாளாளர், புகார் அளித்த மாணவிகள், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர். … The post ஆன்லைன் வகுப்பின் போது ஆபாசமாக படம் பிடித்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு!: ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக் தகவல்..!! appeared first on Dinakaran.
சென்னையில் 9, 13, 14, 15வது மண்டலங்கள் மற்றும் தாம்பரம் பகுதிகளில் நாளை முதல் ஜூன் 2ம் தேதி வரை 2 நாளுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை : குடிநீர் வாரியம் தகவல்
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் மனநலம், நரம்பியல் துறைக்கு உலக தரத்தில் புதிய கட்டிடம்: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது
சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை
பெங்களூருவில் இருந்து சென்னை வந்தவரிடம் ₹19.50 லட்சம், 114 கிராம் தங்கம் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை
பராமரிப்பு பணி காரணமாக புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இன்று செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்
நெரிசல் மிகுந்த ராயப்பேட்ைட பகுதியில் செப்டம்பரில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கும்: அதிகாரிகள் தகவல்
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் புகைப்படம் தயாரிப்பு 14 வயது சிறுமியின் உருவம் வரைந்து வலைத்தளங்களில் தேடும் பணி தீவிரம்: 2011ம் ஆண்டு ஒன்றரை வயதில் குழந்தை மாயமான புகார் நீதிமன்ற உத்தரவுப்படி குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
சென்னையில் நான்காவது சம்பவம் சிறுமியை ஓடஓட விரட்டி கடித்து குதறிய தெருநாய்கள்: சிசிடிவி காட்சிகளால் மீண்டும் பரபரப்பு
பணம் திருடியவர்களை பிடிக்க முயன்றதால் நடைபாதையில் தூங்கிய வாலிபர் மீது ஆசிட் வீச்சு: தப்பிய 4 பேருக்கு வலை
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ₹20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 1 லட்சத்து 77 ஆயிரம் யூனிட் சூரியஒளி மின்சார உற்பத்தி: மாநகராட்சி அசத்தல்
அபார வளர்ச்சியால் விரிவடையும் மாநகராட்சி புதிதாக 50 ஊராட்சிகளை இணைத்து 250 வார்டுகளாக அதிகரிக்க திட்டம்: ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் கமிட்டி அமைப்பு
பூந்தமல்லி அருகே உணவு, தண்ணீரின்றி வீட்டில் அடைக்கப்பட்ட 18 நாய்கள் மீட்பு: உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு விலங்குகள் நலவாரியம் நடவடிக்கை