இத்தாலியிலிருந்து அமிர்தசரஸ்க்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த 125 பயணிகளுக்கு கொரோனா

சண்டிகர்: இத்தாலியிலிருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்த விமானத்தில் பயணித்த 125 பேருக்கு கொரோனா உறுதியானது. அமிர்தசரஸ் விமான நிலையத்தில் பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது தெரியவந்தது. கொரோனா உறுதியான அனைவரின் மாதிரிகளும் ஒமிக்ரான் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 179 பேரில் 125 பயணிகளுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Related Stories: