ஹைதராபாத் : ஒடிசாவைத் தொடர்ந்து ஆந்திராவிலும் காலில் சீன முத்திரை டேக்குடன் கட்டப்பட்ட புறா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் அருகே சீமகுர்த்தி எனும் ஊரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 2மாதங்களாக இந்த புறா வளர்க்கப்பட்டு வந்துள்ளது. காலில் சீன முத்திரையுடன் கூடிய டேக்குடன் இருந்த புறாவை அந்த கட்டிடத்தின் உரிமையாளர் நாகராஜு தானியங்களை போட்டு வளர்த்துள்ளார். இதற்கிடையே ஒடிசாவில் இது போன்று சீன முத்திரையுடன் புறா கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியானது.