திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நண்பன் தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாக்காமல் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சி ஊராட்சிக்குட்பட்ட கோட்டை மாநகரை சேர்ந்த 17 வயது சிறுவன் மில்டன், தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மில்டனுடன் 11ம் வகுப்பு முதல் ஒன்றாக படித்து வந்தவர் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் பகுதியை சேர்ந்த உதயகுமார்.