மதுரை: மதுரை அருகே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் வழங்கப்படாததை கண்டித்து கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகேயுள்ள இரும்பாடி, கருப்பட்டி சுற்றுவட்டார பகுதியிலுள்ள அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்துள்ளனர். விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லுக்கான ரசீது வழங்கப்பட்ட நிலையில் அதற்கான முழுமையான பணம் வழங்காமல் விவசாயிகளிடமிருந்து தலா ரூ. 3,000 வரை மோசடி செய்யப்பட்டதாக தொடர்ந்து புகார் எழுந்தன.