திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் விடுத்துள்ள அறிக்கை. தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பொருள் தேர்வு தொகுதி 4 (உத்தேச பணி காலியிடங்கள் 5, 255) அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அரசு பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகளவில் பணி நியமனம் செய்வதற்கு ஏதுவாக போட்டி தேர்வுக்கான அனைத்து பாடகுறிப்புகளும் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் tamilnaducareerservices .tn.gov.in என்ற கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.