டெல்லி : இந்தியாவிலேயே பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துணை செயலாளர் சுதான்சு பாண்டே பாராட்டு தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு திட்டங்களின் அமலாக்கம் தொடர்பாக, உதகமண்டலத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் திரு. சுதான்சு பாண்டே ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொது விநியோக ஆணையர் வி.ராஜாராமன் ஐஏஎஸ், மாவட்ட ஆட்சியர் திரு. பி.அம்ரித் மற்றும் மாநில அரசின் இதர அதிகாரிகள் உடன் இருந்தனர்.இந்த கூட்டத்தில் பேசிய சுதான்சு பாண்டே, தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்திற்கு பாராட்டுத் தெரிவித்தார்.