நெல்லை : ரயில்களில் எளிதில் தீ பற்றும் பொருட்களை எடுத்துச் செல்வோரை கண்காணிக்கும் வகையில் நேற்று நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்ப நாய் பிரிவினர் அதிரடி சோதனை மேற்ெகாண்டனர்.தென்மாவட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளிடம் ரயில் பயணங்கள் குறித்து போதிய விழிப்புணர்வை மேற்கொள்ள மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் அன்பரசு உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக எளிதில் தீ பற்றும் பொருட்களான பட்டாசு, மண்ணெண்ணெய், கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்வோரை கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளார்.