சென்னை: உரிய பாதுகாப்பு, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த ஆண்டை போன்றே டிஜிட்டல் முறைப்படி சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதுடன் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடித்து தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். ஆளுநர் உரை முந்தைய கூட்டத்தொடர் போன்றே டிஜிட்டல் முறையில் பேப்பர் இல்லாமல் நடைபெறும் என்று அப்பாவு தெரிவித்திருக்கிறார்.