பெங்களூரு: 12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 17வது லீக் போட்டியில் புனேரி பால்டன்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாட்னா 38-26 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில் முதல் பாதியில் அரியானா 23-19 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது.