திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பழமையான சமண படுக்கை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆரணி அடுத்த பெரிய அய்யம்பாளையம் கிராமத்தில் புகழ் பெற்ற உத்தமராயர் ஆலயம் அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் அருகே 10 ஆம் நூற்றாண்டில் சமண துறவிகள் ஓய்வெடுக்க பயன்படுத்திய மூன்று சமண படுக்கை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, படவேடு சந்தவாசல், ஏகாம்பரநல்லூர், மாமண்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பண்டையகால கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற பண்டைய கால நினைவுச் சின்னங்களை சேகரித்து ஆரணியில் அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த வேண்டுமென்று வராலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.