ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் 66 பேர் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகள் மயிலட்டி, தலைமன்னார் கடற்படை முகாம்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 19ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர். இதனால் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் ஏராளமான படகுகள் ராமேஸ்வரம் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.