கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்ற பாலா (36). கொடைக்கானலில் போக்குவரத்து தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பணி நிமித்தம் அப்சர்வேட்டரி பகுதிக்கு டூவீலரில் சென்றார். பணியை முடித்துவிட்டு இரவில் காவல்நிலையம் திரும்பும்போது, அப்சர்வேட்டரி சாலையில் பள்ளத்தில் ஏறி இறங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பாலா படுகாயம் அடைந்தார். உடனே அவரை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலசுப்பிரமணியன் இறந்தார். இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.