விஜய் ஹசாரே கோப்பை.! கடைசி பந்தில் த்ரில் வெற்றி; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தமிழ்நாடு அணி

டெல்லி: விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த அரையிறுதியில் ஆட்டத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று நடந்த அரையிறுதியில் ஆட்டத்தில் தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்தது.

இதில் அதிகபட்சமாக ஷெல்டன் ஜாக்சன் 134 ரன்கள் குவித்தார். தமிழக அணி தரப்பில் விஜய்சங்கர் 4 விக்கெட் கைப்பற்றினார் .இதன்பிறகு 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. இதில் ஜெகதீசன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க, அடுத்து வந்த விஜய் சங்கர் 4 ரன்னில் வெளியேறினார். இதன்பிறகு பாபா அபாரஜித் – இந்திரஜித் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர்.

இதில் இந்திரஜித் 50 ரன்னில் ஆட்டமிழக்க , அபாரஜித்  122 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 31  ரன்னும் ,ஷாருக்கான் 17 ரன்னும்  எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அதோடு அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியாக தமிழக அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Related Stories: