செஞ்சூரியன்: தென்ஆப்ரிக்கா-இந்தியா இடையே 3 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் போட்டி நாளை மறுநாள் செஞ்சூரியனில் தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பயிற்சிக்கிடையே இந்திய வீரர் புஜாரா அளித்துள்ள பேட்டி: தென்ஆப்பிரிக்க ஆடுகளங்களில் வேகமும், பவுன்சும் இருக்கும், பந்து நன்கு திரும்பும் என்பது தெரியும். எனவே வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆனால் வேகப்பந்து வீச்சு தாக்குதலை எங்களால் திறம்பட சமாளிக்க முடியும்.