வாஷிங்டன்: கொரோனா பரவல் காரணமாக சில விசாக்களை நேர்காணல் இல்லாமல் தரும் வகையில் அமெரிக்க அரசு விதிகளில் தளர்வு அளித்துள்ளது. மூன்றாவது ஆண்டாக கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் விசா வழங்குவது தொடர்பாக தூதரகங்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி தனித்திறன் ஊழியர்களுக்கு வழங்கப்படும் H1B விசா, கல்வி தொடர்பாக வழங்கப்படும் H3 விசா நிறுவனங்களுக்கிடையே பணி மாறுவோருக்கு வழங்கப்படும் O விசா ஆகியவற்றுக்கு நேர்காணல் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல்கள் இல்லாமல் 2022 டிசம்பர் வரை இத்தகைய விசாக்களுக்காக தூதரக அதிகாரிகள் அனுமதி அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.