மும்பை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி: கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய தொடரில் மெல்போர்ன் டெஸ்ட்டில் ஆடிய சிராஜ் தனது அறிமுக போட்டியில் விளையாடியது போன்றே விளையாடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்கு முதிர்ச்சி அடைந்த ஒரு வீரரின் உடல் மொழி எவ்வாறு இருக்குமோ அதேபோன்று அவர் நேர்த்தியாக செயல்பட்டார். அதுமட்டுமின்றி நான் ஒவ்வொரு முறை அவரின் பந்துவீச்சை பார்க்கும் போதும் புதுப்புது விஷயங்களை அவர் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார். சிராஜின் பார்ம் அசத்தலாக தொடர்ந்து வருகிறது. அவர் கால்களில் ஸ்ப்ரிங் வைத்துள்ளார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் ஓடிவருவதை பார்க்கும்போது அவ்வாறு தான் இருக்கிறது. அந்த அளவிற்கு அவர் முழு எனர்ஜியுடன் பந்து வீசுகிறார்.