திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பனுக்கு மண்டலபூஜையின் போது அணிவிப்பதற்கான தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது. மண்டல மகர விளக்குப் பூஜைக்காக நவம்பர் 15 ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த முறையை போலன்றி தற்போது அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் சிறப்பு பூஜைக்காக ஆரன்முலா பார்த்தசாரதி கோவிலில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் காலை புறப்பட்டது.