கோவை: தமிழ்நாட்டில் முதல்முறையாக மலைப்பாதை விபத்துகளை தடுக்க தானியங்கி எச்சரிக்கை ஒலிபெருக்கி கருவி பொருத்தப்பட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கல்லாறு பகுதியில் யானைகள் எளிதாக கடந்து செல்ல மேட்டுப்பாளையம் - ஊட்டி நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், ஊட்டி மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.