சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடிக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையால் 55 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட இரண்டு சம்பவங்களை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் 570 படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே கடந்த 18ம்தேதி இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் 43 தமிழக மீனவர்களை கைது செய்ததுடன், அவர்களின் 6 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர்.