கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பழமையான 4 பள்ளி கட்டிடங்கள் இடிப்பு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் 4 பழமைவாய்ந்த பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. நெல்லையில் தனியார் பள்ளியில் கழிப்பறை கட்டிட சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பழமை வாய்ந்த கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் பழமைவாய்ந்த பள்ளி கட்டிடங்கள் குறித்து கண்டறியப்பட்டது.

இதில் மிகவும் மோசமாக கட்டிடம் இருந்த மேட்டுதிருக்காம்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மேட்டுப்பட்டி தொடக்கப்பள்ளி, பஞ்சப்பட்டி, போத்துராவுத்தன்பட்டி தொடக்கப்பள்ளிகளில் இருந்த பழமை வாய்ந்த பள்ளி வகுப்பறை கட்டிடங்கள், சத்துணவு கூடங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டதாக கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார்.

Related Stories: