டோக்கியோ: மேற்கு ஜப்பானின் ஒசகாவின் கிடாசின்சி பகுதியில் 8 மாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் மருத்துவமனை, பள்ளி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று திடீரென நான்காவது மாடியில் தீப்பற்றியது. மளமளவென பரவிய தீயால், சிகிச்சை பெற வந்தவர்கள் உட்பட ஆங்காங்கே இருந்தவர்கள் என அனைவரும் அலறி கூச்சலிட்டனர். இதனிடையே தகவலின் பேரில் தீயணைப்பு துறை வீரர்கள் அங்கு விரைந்தனர்.